Connect with us

உள்நாட்டு செய்தி

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

Published

on

நாளாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நாளாந்தம் 30,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை உடனடியாக சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.