Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் 21 பேருக்கு கொரோனா

Published

on

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல்கள் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்த எண்ணிக்கையுடன் கடந்த 24 மணி நேரங்களில் வடக்கில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.