Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்ற வளாகத்தில் ஜே.வி.பி போராட்டம்

Published

on

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்ற அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்து ஜே.வி.பி ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இந்த போராட்டம் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இடம்பெறுகின்றது.