Connect with us

உள்நாட்டு செய்தி

CTB பஸ்களை இன்றையதினம் கூடுதலாக பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை

Published

on

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை இன்றையதினம் கூடுதலாக பயன்படுத்தி மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அலுவலக பயணிகளின் வசதி கருதி இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையின் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இரண்டு ரயில் தொழிற் சங்கங்கள் முன்னறிவிப்பின்றி பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாக தகவல் கிடைத்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த ராஜாங்க அமைச்சர் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் மிகவும் நெருக்கடி மிக்க சூழலில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அற்ப நோக்கங்களுக்காக நியாயமற்ற வகையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட முயற்சிப்பது கவலைக்குரிய விடயம் என்றும் அவர் கூறினார்.