Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள்

Published

on

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் (15) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 400  கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 728 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
அவற்றில் யாழ்ப்பாணத்தில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று (15) மாலை கிடைக்கப் பெற்றுள்ளது.

அவற்றில் 10 பேரூக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் மன்னார் பெரியகமம், சாவக்காடு, உப்புக்குளம், பேசாலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள்.அவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 527 பீ.சி.ஆர்.பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.