Connect with us

உள்நாட்டு செய்தி

உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட 21 கிராம சேவகர் பிரிவுகள்

Published

on

நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த மற்றும் பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள்.

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகொல, குபுக்மிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவாலகம, கலஹாகம, கொஸ்வத்த, கபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு மற்றும் தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள்.
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கூம்ஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவு

மேற்படி பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.