Connect with us

Sports

IPL தொடர் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் – BCCI

Published

on

IPL தொடர் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியாக வீரர்களும் அணி நிர்வாகத்தினரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பயற்றுவிப்பாளர் மற்றும் வீரர்கள், கொல்கொத்தா (KKR) அணியின் இரு வீரர்கள், டெல்லி கெப்பிடல்ஸ் (DC) அணியின் வீரர்களுக்கு இதுவரை தொற்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஐபிஎல் போட்டிகளுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக IPL தலைவர் பிரிஸே; பட்டேல் தெரிவித்துள்ளார்.

மேலும் போட்டிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் இடைவிலகுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.