Connect with us

உலகம்

பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் – ஸ்டாலின்

Published

on

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படவுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட சபை தேர்தலில் வெற்றிப் பெற்ற ஸ்டாலின் நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்றார்.

இதன்போது கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் கூறியதாவது:

“திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.