Connect with us

உலகம்

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

Published

on

தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டித்து உத்தரவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் அவர் தமிழக மக்களை கேட்டுள்ளார்.