Connect with us

உலகம்

தமிழகத்தின் தலை விதி இன்று தீர்மானிக்கப்படவுள்ளது

Published

on

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று (02) வெளியாகவுள்ளன.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மையம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது.

மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.