Connect with us

உள்நாட்டு செய்தி

12 மணி முதல் என்டிஜன் பரிசோதனை

Published

on

கொழும்பிற்கு வாகனங்களில் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கு உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று மதியம் 12 மணி முதல் குறித்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.