Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை

Published

on

பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதலிகே வசந்த குமார, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் பெயரிடப்பட்ட 14 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.