Connect with us

Uncategorized

32 இலட்சம் ரூபா பெறுமதியாக பொருட்களை இலங்கைக்கு கடத்திய அறுவர் கைது

Published

on

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 32 இலட்சம் ரூபா பெறுமதியாக தடைச்செய்யப்பட்ட பொருட்கள் சிலவற்றை கடத்திய அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் கடற்பகுதியில் வைத்து நேற்றிரவு 11.30 அளவில் குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ஆறு இலங்கையர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சுங்க பிரிவினர் ஊடாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.