Connect with us

உள்நாட்டு செய்தி

WWE பாணியில் நடந்துக்கொண்ட பொலிஸ் அதிகாரி (காணொளி)

Published

on

வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, ஒருவரை தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த அதிகாரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியில் பொலிஸ் அதிகாரி, ஒருவரை தாக்கி அவரின் மேல் பாய்ந்து அவரும் கீழே விழுவது போல் அண்மையில் இருந்த சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது