Connect with us

Politics

தேர்தலின் பின்னர் இலங்கை தமிழர்கள் குறித்து தென்னிந்திய அரசியல்வாதிகள் கருத்திற்கொள்ள மாட்டார்கள் – சுசில் பிரேமஜயந்த்

Published

on

தென்னிந்திய தேர்தல் மேடைகளில் இலங்கை தமிழர்களின் விடயங்கள் குறித்து பிரதான விடயமாக பேசுவது தொடர்பில் கருத்திற்கொள்ள தேவையில்லை என தொலைநோக்கு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டுள்ளார்.


பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தேர்தலின் பின்னர் இவை மறைந்து விடும் என்றும் , காலம் காலமாய் இதுவே நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பாரிய போராட்டத்திற்கு பின்னர் நாட்டில் மூன்று தசாப்த போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , எந்த ஒரு வழியிலும் பிரிவினைவாதம் தலைத்தூக்க இடமளிக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *