Connect with us

உள்நாட்டு செய்தி

1000 ரூபா குறித்த வர்த்தமானி வெளியீடு

Published

on

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இறப்பர் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபா என அறிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.

சம்பள நிர்ணய சபையின் ஊடாக மேற்படி தொழிலாளர்களின் குறைந்தப்பட்ச நாளாந்த சம்பளம் 900 எனவும் வரவு செலவுத் திட்ட கொடுப்பனவாக 100 ரூபாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படியே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், இது கடந்த 5 ஆம் திகதி முதல் அமுலுக்குவர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.