Connect with us

உள்நாட்டு செய்தி

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி யில் 12 கொரோனா தொற்றாளர்கள்

Published

on

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொற்றாளர்கள் ஹட்டன் மென்டிஸ் மாவத்தையில் மூன்று பேரும் பிரவுனஸ் வீதியில் மூன்றும் பேரும் வில்பர்ட்புரம் பகுதியில் மூன்று பேருமாக 09 பேர் இன்று (22) வெளியான பி.சி,ஆர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலும் நேற்று (21) டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேற்கொண்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையின் பிரகாரம் இருவருமாக மொத்தம் 11 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு இனங்காணப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் இவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த தொற்றாளர்கள் பாடசாலைகளில் இனங்காணப்பட்ட தொட்டாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தார்.