Connect with us

உள்நாட்டு செய்தி

1000 ரூபா விவகாரம் – தொடரும் இழிப்பறி,மார்ச் மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை

Published

on

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடி 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள நிர்ணய சபையில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தோட்ட கம்பனிகள் சார்பாக ஒருவர் மத்திரமே பங்கேற்ற நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் சம்பள நிர்ணய சபை மீண்டும் மார்ச் மாதம் முதலாம் திகதி கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேசவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார்.