Connect with us

முக்கிய செய்தி

இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: பொலிஸார் விசாரணை

Published

on

 

கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதிக்குள் இன்று (18) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள ஹோட்டலுக்குள் அமைந்துள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரவு விடுதிக்கு உள்ளேயும் வெளியேயும் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 02.00 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *