Connect with us

முக்கிய செய்தி

துபாயில் வேலை கிடைக்காத விரக்தியில்,உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்…!

Published

on

வேலை கிடைக்காத விரக்தியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை வெளியிட்டு விட்டு,

இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கேரளா – எர்ணாகுளத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரிப் (28). இவர் தனது வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து, அஜ்மலை உடலை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து அஜ்மல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், அஜ்மலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இறப்பதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை அஜ்மல் ஷெரிப் வெளியிட்டிருந்தார். அதில், ரெஸ்ட் இன் பீஸ் அஜ்மல் ஷெரிப் 1995-2023 என பதிவு செய்திருந்தார்.

முன்னதாக, துபாய் சென்றிருந்த அஜ்மல், வேலை கிடைக்காததால் தாய்நாடு திரும்பினார்.

இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *