Connect with us

உள்நாட்டு செய்தி

சுமாத்திரா தீவில் 6.2 ரிக்டர் அளவான நிலநடுக்ம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

Published

on

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் பெங்குலா பகுதியிலேயே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவின் இலங்கை திசையிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *