Connect with us

முக்கிய செய்தி

கொழும்பில் நாளை முதல் பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Published

on

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பசும்பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் இவ்வாறு பசும்பால் விநியோகிக்கப்படவுள்ளது.நரஹென்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபை வளாகத்தில் நாளைய தினம் குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போஷாக்கு குறைபாட்டை நீக்கும் வகையில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *