முக்கிய செய்தி
உரத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/03/3a76f75e-5b008c06-2cb56146-agriculture-ministry_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg)
![](https://i0.wp.com/capitalnews.lk/wp-content/uploads/2023/04/Mahinda.Amaraweera.jpg?w=740&ssl=1)
MOP வகை உரத்தின் விலையினை 4500 ரூபாவினால் குறைப்பதற்கு அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கவனஞ் செலுத்தப்பட்டதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது
50 கிலோகிராம் MOP வகை உர மூடையொன்று தற்போது 18 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது
குறித்த விலையை மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினால், விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், இது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
குறைந்த விலையில் உரம் வழங்கும் வகையில் அரசுக்கு சொந்தமான இரு உர நிறுவனங்களும் செயல்பட்டு வருவதால், ரசாயன உர விற்பனையில் சந்தையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.