Connect with us

முக்கிய செய்தி

350 கோடி பெறுமதியான ஹெரோயின் பறிமுதல்

Published

on

தென் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 350 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் பிராந்தியத்தில்  சர்வதேச கடற்பரப்பில், நேற்று பெருமளவிலான போதைப்பொருளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன், அதிலிருந்த 6 பேர் கைதுசெய்யபட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், போதைப்பொருளுடஹென் இன்று காலை காலி மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்படையினரால் அழைத்துவரப்பட்டனர்.

 பறிமுதல் செய்யப்பட்ட  ஹெரோயின் போதைப்பொருளின் நிறை சுமார் 175 கிலோகிராம் என அளவிடப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகபேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள்,  மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *