Connect with us

உள்நாட்டு செய்தி

மிதிகம பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

Published

on

மிதிகம  பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மாத்தறை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த நபர்  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்  தெரிவிக்கின்றன.

ஹோட்டல் உரிமையாளரான குறித்த நபர்  மீது  அடையாளம் தெரியாத குழுவொன்றினால் நேற்று இரவு   துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன

 காயமடைந்த 31 வயதான ஹோட்டல் உரிமையாளர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 இந்த நிலையில்சிகிச்சை பலனின்றி    குறித்த நபர் இன்று  அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இதேவேளை கொஸ்கம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை  செய்யப்பட்டுள்ளார்

 இரண்டு தரப்பினருக்கிடையில்  ஏற்பட்ட மோதலில்  கொஸ்கம   மூனமல்வத்த பகுதியில்  நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

 சம்பவத்தில் காயமடைந்த  நபர் சிகிச்சைகளுக்காக  அவிஸாவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்வை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்

 களுஅக்கல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்