Connect with us

உள்நாட்டு செய்தி

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது

Published

on

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில்   சந்தேகநபர்கள் நால்வர்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் பெப்ரவரி 15 ஆம் திகதி,  சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து   முதலாம் வருட  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில்   சந்தேக நபர்கள் பலங்கொடை பகுதியில்  வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.தெஹிவளை, மொரட்டுவ, அம்பலாங்கொட மற்றும் வெலிமடை ஆகிய  பிரதேசங்களைச் சேர்ந்த 23, முதல்  25 வயதுக்குட்பட்ட  நால்வர் இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை சந்தேகநபர்கள் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *