Connect with us

உள்நாட்டு செய்தி

ஷாஃப்டரின் மனைவியிடம் விசாரணை ஆரம்பம்

Published

on

கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.தினேஷ் ஷாஃப்டரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் அவருடன் சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்ட நபர்கள் குறித்து சுமார் இரண்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.ஷாஃப்டரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் இது தொடர்பான வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக ஷாப்டரின் மனைவியின் கைத்தொலைபேசி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.Zero News