Connect with us

முக்கிய செய்தி

பாலியல் குற்றச் செயல்கள் தண்டனை சட்டத்தில் சேர்க்க உத்தரவு

Published

on

பாலியல் குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் என்பவற்றை குற்றமாக கருதும் சரத்துகளை தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் என்பவற்றை குற்றமாக கருதும் சரத்துகளை தண்டனைச் சட்டத்தில் சேர்க்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் விடையங்களில் நாட்டில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் எல்லை மீறிச் செல்லும் வேளையில் தான் இதனை நாங்கள் தீர்க்கமான முடிவாக தண்டனை சட்டத்தில் சேர்க்கின்றோம். குற்றவியல் சட்டத்தின் 341ம் பிரிவில் இதனை சேர்ப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *