Connect with us

Politics

பசிலின் ஏற்படுத்திய செலவு 7 கோடிகளுக்கும் மேல், பொறுப்பேற்க யாரும் இல்லை.

Published

on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கேளிக்கைகளுக்காக 73 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த தொகையை இதுவரை யாரும் செலுத்தவில்லை என்றும் அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவிற்கும் அவரது மனைவிக்கும் 400 டொலர்கள் வழங்கப்பட்ட போதிலும், பெசில் ராஜபக்ஷவை வரவேற்க முனையத்தில் இரண்டு அறைகளில் கூடியிருந்த 100 பேருக்கும் பணம் வழங்கப்படவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
இதன்படி, ஒரு நபருக்கு 200 டொலர் வீதம் 73 மில்லியன் ரூபாவை அந்த குழுவிற்கு செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.