Connect with us

Sports

ஒற்றுமை குறித்து தசுன் கூறியது

Published

on

இலங்கை அணியில் அனைவரும் ஒரே மட்டத்தில் இருப்பதால் அணியை வழிநடத்துவது இலகுவாக உள்ளதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (15 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

“ஹசரங்கா, ஷாமிகா, பானுக ஆகியோர் ஐபிஎல்லில் விளையாடியுள்ளனர், மற்ற அனைத்து லீக்களிலும் விளையாடுகிறார்கள். எனினும் நான்தான் எல்லாம் என்ற இடத்தில் இருந்தது இல்லை எல்லோரும் ஒரே லெவலில் இருக்கிறார்கள். அணியில் உள்ள அனைவரும் ஒரே மட்டத்தில் உள்ளனர். இது மிகப் பெரிய பலம். எனக்கு மட்டும் கிரடிட் எடுக்க முடியாது. ஒரு குழுவாக, ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதில் பங்குண்டு” என்றார்.