Connect with us

Sports

இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி

Published

on

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்தியா அணி சார்பில் விராட் கோஹ்லி அதிகபட்சமாக 60 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஷதாப் கான் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன்படி, 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

மொஹமட் நவாஸ் 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *