Connect with us

உள்நாட்டு செய்தி

ஐ.நா செல்லும் இலங்கை குழாம்

Published

on

மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வு 2022 செப்டம்பர் 12 முதல்  அக்டோபர் 07 வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது.

செப்டெம்பர் 12, திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான  ஊடாடும் உரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி, சபையில் அறிக்கை ஒன்றை  சமர்ப்பிக்கவுள்ளார்.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு  அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் இந்தத் தூதுக்குழுவில் இணைந்து கொள்ளவுள்ளார்.