Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் நாட்களில் பாணின் விலை அதிகரிக்கும்???

Published

on

கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பாணின் விலையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தினராலும் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலை தற்போது அதிகரித்துவிட்டது. மாவுக்கான நிர்ணய விலையில்லை. விலைநிர்ணயம் இல்லாத காரணத்தினால் இஷ்டப்படி மாவின் விலை ஏற்றப்படுகின்றது. பாணிண் விலையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.

கோதுமை மா இல்லை என்பதுடன் அதன் விலையும் அதிகரித்துவிட்டது. அதனால் தற்பொழுது நாங்கள் மாவினை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

கோதுமை மா விலை பற்றி நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபையினர் கதைக்கவில்லை. ஆனால் முட்டைவிலை பற்றி மாத்திரம் கதைத்து கொண்டிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஒரு கிலோ மா 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இனி எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பாணின் விலையை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படும். கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தினராலும் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும்

எதிர்வரும் நாட்களில் பாணின் விலை அதிகரிக்கும். சில வெதுப்பக உரிமையாளர்கள் பாணின் விலையை அதிகரிக்காவிட்டாலும் நிறையினை குறைப்பார்கள்.

இதன் காரணமாக முரண்பாடான நிலை ஏற்படும். எனவே பாணிண் உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அரிசி மாவினை பாணுடன் கலந்து செய்வதற்கான உத்தியை கையாண்டு கொண்டிருக்கின்றோம். அது வெற்றியளிக்கும் பட்சத்தில் அரிசிமாவினை கலந்து பாண் உற்பத்திசெய்வதன் மூலம் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு பாண் வழங்க முடியும்.

வெதுப்பக உற்பத்திகளின் சகல மூலப் பொருட்களும் விலையேறியுள்ளன. அதன் காரணமாகவே பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. எந்த கடையிலும் கோதுமை மா இல்லை. பிறீமா நிறுவனம் நமக்கு வழங்கிய மாவின் அளவினை தற்பொழுது குறைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்னும் 15 நாட்களில் சகல வெதுப்பகங்களினையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டும். ஆனால் தற்பொழுது இந்தியாவில் வழங்கப்பட்ட மா மூலம் யாழ்ப்பாணத்தில் வெதுப்பக உற்பத்தி தக்க வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலை தொடருமாக இருந்தால் வரும் நாட்களில் வெதுப்பகத்தினை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *