Connect with us

உள்நாட்டு செய்தி

அமைச்சர் கஞ்சன உறுதி

Published

on

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று (20)  முதல் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்றிரவு விமான எரிபொருள் தரையிறக்கப்பட உள்ளதாகவும், இந்த இரண்டு சரக்குகள் மூலம் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர  உறுதியளித்துள்ளார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *