Connect with us

உள்நாட்டு செய்தி

“ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும்”: ஜனாதிபதி

Published

on

இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை ஆற்றிய போது இதனை தெரிவித்திருந்தார்.

நாம் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் அனைவரும் கடந்த மே 9 ஆம் திகதி முதல் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன்.

புதிதாய் சிந்தித்து முன் செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றிணைவது அவசியம். அனைவரும் இணைந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது அவசியம். நாம் ஒன்றிணைய முயற்சிப்போம். நாம் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம்.”