Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியானார் திரவுபதி முர்மு

Published

on

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுள்ளார்.

இந்தியாவின் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.

பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.

அங்கு திரவுபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரவுபதி முர்முவுக்கு ராம்நாத் கோவிந்த் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து இந்திய நாடாளுமன்ற மைய வளாகத்தில் நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்.

அவர் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன் பின்னர் திரவுபதி முர்மு பேசியதாவது: “இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் எனது வலிமை. இந்த பதவியை கௌரரவிக்கும் வகையில் செயல்படுவேன்” என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *