Connect with us

உள்நாட்டு செய்தி

யூரியா உரம் விவசாயிகளுக்கு …

Published

on

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட யூரியா உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக கமத் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

உரத்தை எதிர்வரும் 10 நாட்களுக்குள் விநியோகித்து நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த உரத்தின் தரம் தொடர்பில் நேற்றைய தினம் விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

50 கிலோ உர மூடை 10 ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன லொகு ஹேவகே தெரிவித்துள்ளார்.