Connect with us

உள்நாட்டு செய்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல்…

Published

on

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி – மார்ச் மாதங்களில் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர், பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட உயர்தரப் பரீட்சை கூட தாமதமாகிவிட்டதாகவும், விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.