Connect with us

உள்நாட்டு செய்தி

“ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார்”

Published

on

ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி உலக சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ´´நாட்டில் பஞ்சம் இருக்காது என்றும்´´, “பொருளாதார நிலைமையின் தீவிரத்தை முதலில் நாம் பார்க்க வேண்டும். அது பற்றிய முழுமையான கணக்கு யாரிடமும் இல்லை.”

“முதன்முறையாக ஒரு மருத்துவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போல் உள்ளது. எங்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக எனக்குத் தெரியும். சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பணம் திரட்ட வேண்டும்.”

“எங்களுக்கு உதவவும், நிதியுதவி செய்யவும் எங்கள் நட்பு நாடுகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன், மேலும் வெளிநாட்டு முதலீட்டிற்கு சரியான சூழலை உருவாக்க வேண்டும்.” எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.