Connect with us

உள்நாட்டு செய்தி

ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுலாகும்

Published

on

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது.

மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளைக் காலை 6 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (12) அறிவித்தது.

இந்தக் காலப்பகுதியில் ,அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.