Connect with us

உள்நாட்டு செய்தி

ஊரடங்குச் சட்டம் 7 மணித்தியாலங்களுக்கு தளர்வு

Published

on

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (12) காலை 07.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், மறுநாள் (13) காலை 06.00 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.