Connect with us

உள்நாட்டு செய்தி

19ஆவது திருத்தத்தில் காலத்திற்கேற்ற திருத்தங்களை மேற்கொண்டு அமுல்படுத்துவதே நடைமுறை சாத்தியமிக்க தீர்வாகும் – பிரதமர்

Published

on

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வலுவற்றதாக்கி, 19ஆவது திருத்தத்தில் தேவையான மற்றும் காலத்திற்கேற்ற திருத்தங்களை மேற்கொண்டு அமுல்படுத்துவதே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான நடைமுறை சாத்தியமிக்க தீர்வாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையின் முதலாவது அமர்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (26) இடம்பெற்றது.

இதன் போது இது தொடர்பான ஆலோசனையை பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்தார். திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க பிரதமர் அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளார்