Connect with us

உள்நாட்டு செய்தி

இறம்புக்கனை ஆர்ப்பாட்டம்: ஒருவர் பலி பலர் காயம்

Published

on

ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மோதலில் 10 பேர் காயமடைந்த நிலையில், கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி, இன்று காலை முதல் வீதிகளை மறித்து மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.