Connect with us

உள்நாட்டு செய்தி

“பொது மக்கள் இன்று வீதி ஓரங்களில்”

Published

on

புத்தாண்டை கொண்டாட வேண்டிய பொது மக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுப்படுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசாகும்.

மேலும், இந்த சூழ்நிலைக்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பிழையான பொருளாதார கொள்கையாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.