Connect with us

உள்நாட்டு செய்தி

நாளைய தினமும் நாட்டில் மின்வெட்டு

Published

on

நாளைய தினமும் (10) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு நாளை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்படும்.

இதேவேளை, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.