Connect with us

உலகம்

ராணுவ தளத்தின் மீதான ரஷிய தாக்குதல் முறியடிப்பு

Published

on

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 3-வது நாளாக நீடித்து வருகிறது.

தலைநகர் கீவை நோக்கி முன்னேறியுள்ள ரஷிய படையினரால் உக்ரைன் மக்கள் கதிகலங்கிப்போய் உள்ளனர்.

இந்த தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ரஷியாவை வலியுறுத்தி வருகின்றன. 

எனினும், உக்ரைன் மீது முழு வீச்சில் ரஷியா தாக்குதலை அரங்கேற்றி வருகின்றது.

இந்த நிலையில், தலைநகர் கீவ்வில் உக்ரைன் ராணுவ தளத்தின் மீதான ரஷிய முறியடிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.