Connect with us

Sports

15 ஆவது IPL ஏலம் இன்றும் தொடரவுள்ளது

Published

on

15 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் இடம்பெறவுள்ளது.

இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக இணைந்துள்ளன.

இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் நடவடிக்கை நேற்று (12) பெங்களூருவில் ஆரம்பமானது.

அதன்படி முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றன.
இதனிடையே, சில முக்கியமான நட்சத்திர வீரர்களை அடிப்படை விலைக்கு கூட எந்த அணியினரும் எடுக்க முன் வரவில்லை.

இந்திய அணியின் வேகப்பந்து வேச்சாளர் உமேஸ் யாதவ், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாகா மற்றும் தென் ஆப்பிரிகாவின் அதிரடி வீரர் டேவிட் மில்லர், சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், அவுஸ்திரேலியாவின் மேத்தீவ் வேட், எடம் சம்பா, இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ், பங்காளதேசஸின் சகிப் அல் ஹசன், மற்றும் ஆப்கானிஸ்தானின் முகம்மது நபி போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்களை ஏலத்தில் எடுக்க நேற்று எந்த அணியும் முன் வரவில்லை.