Connect with us

உள்நாட்டு செய்தி

நுணாவில் பகுதியில் விபத்து, இருவர் பலி

Published

on

தென்மராட்சி – நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது இன்று (09) சற்றுமுன் கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனத்தின் மீது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த கார் ஒன்று மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிறுவன் (04-வயது), பெண் (34-வயது) உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டபிள்யூபி (WP) என்ற பதிவிலக்கமுடைய கார் என்பதால் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.