Connect with us

Sports

சூதாட்ட சர்சையில் பிரன்டன் டெய்லர்

Published

on

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லர் சூதாட்ட சர்சையில் சிக்கியுள்ளார்.

இதனால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அவருக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தரகர் ஒருவரின் ஊடாக 15,000 டொலர் ஸ்பொட் பிக்ஸின் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ICC தெரிவித்துள்ளது.

எனினும் தான் எந்தவொரு போட்டியிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கிடையது என பிரன்டன் டெய்லர் கூறியுள்ளார்.

35 வயதான பிரன்டன் டெய்லர் சிம்பாப்வே அணிக்காக 34 டெஸ்ட், 205 ஒருநாள் மற்றும் 45 T20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.