Connect with us

உள்நாட்டு செய்தி

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

Published

on

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நேற்று (18) இரவு இலங்கை கடற்பரப்பில் நெடுந்தீவுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

ஆறு மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களது படகுகளும் மைலடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கடற்றொழில் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த கைது நடவடிக்கையால் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.